எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் செப்.6- சேலத்தில் நகைக்கடை அதிபரிடம் நிலம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, தம்பி மகன் பாராப்பட்டி சுரேஷ்குமார் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஆர்.டி.ஓ.,தாசில்தார் உள்பட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் தி.மு.க.வினர் பல்வேறு நில அபகரிப்பு வழக்கில் ஈடுப்பட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.தி.மு.க.ஆட்சி காலத்தில் நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கு அ.தி.மு.க.ஆட்சி அமைந்தால் நிலம் மீட்டு கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி ஆட்சி அமைந்ததும் நில அபகரிப்பு மீட்பு பிரிவு என தனிப்பிரிவை தொடங்கினார். இந்த பிரிவுக்கு வரும் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து உரியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலம் மீட்க்கப்பட்டும் வருகிறது.
சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரிமியர் ரோலர் மில் நிலம் அபகரித்து விற்பனை,நிலவாரப்பட்டியில் நிலம் அபகரிக்க தூண்டுதல் என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்கில் முன்ஜாமீன் பெற்று இருந்த வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண்டராகி கையெழுத்திட வரும்போது நிலவாரப்பட்டி நில அபகரிப்பில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் மீண்டும் சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரிடம் நிலம் கேட்டு மிரட்டிய வழக்கு அவர் உள்பட 16 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள்காலனி குடியிருந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் மிரட்டி காலி செய்தனர். அந்த நிலத்தில் அவர் தனது பேத்திக்கு மருத்துவமனை கட்டி தருவதற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்த நிலம் பெங்களூர் மெயின்ரோட்டில் இருந்து உள்புறமாக உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றாள் டி.வி.எஸ்.அருகே உள்ள லஷ்மி சுவீட்ஸ் அருகில் உள்ள அங்கம்மாள் காலனி ரோட்டில் உள்ளே சென்றுதான்செல்ல முடியும்.பெங்களூர் மெயிரோட்டில் செல்லலாம் என்றால் நேராக சென்றுவிடலாம். ஆனால் அங்கம்மாள் காலனி நிலத்திற்கு ம் மெயின்ரோட்டை இணைக்கும் இடத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபருக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. இந்த நிலத்தின் வழியாக சென்றால் மெயின்ரோட்டில் இருந்து எளிதாக அந்த இடத்திற்கு செல்லமுடியும். எனவே அந்த நிலத்தில் வழித்தடம் ஏற்படுத்த நில உரிமையாளரான நகைக்கடை அதிபர் பிரேம்நாத்திடம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,மற்றும் அவரது ஆட்கள் வழிதடம் ஏற்படுத்த 2100 சதுரஅடியை குறைந்த விலைக்கு விட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் அந்த நிலம் தனது பரபம்பரை சொத்து எனவும் அதை விற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையத்து அவருக்கு நிலத்தை கேட்டு வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா உள்ளிட்ட 16 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டல் தொடர்பாக அவர் அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அதை விசாரிக்கவில்லை.
இந்த நிலையில் பிரேம்நாத்தும், அவரது உறவினர்களும் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா உள்ளிட்ட பலர் தன்னுடைய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் வழக்கை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் 4 தனிபடையும், 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நிலம் கேட்டு மிரட்டிய வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ.வும் அவரது மகனுமான வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பாராப்பட்டி சுரேஷ்குமார்,சேலம் முன்னாள் உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, சேலம் முன்னாள் தாசில்தார் ஸ்ரீ ரெங்கநாதன்,பத்திர எழுத்தர் நாராயணன்,சேலம் மாநகர தி.மு.க.துணை செயலாளர் அழகாபுரம் முரளி,முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன்,வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிகnullபதி,சேகர்,தாதை கார்த்தி, கவுன்சிலர் ஜிம்ராமு,ஜான்,பிரகாஷ், சரவணன்,வழக்கறிஞர் தெய்வலிங்கம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 147(சட்டவிரோதமாக கூடுதல்), 148(பயங்கர ஆயுதங்களுடன் கூடுதல்), 386(அச்சுறுத்துதல்)307(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்னாள் உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, முன்னாள் தாசில்தார் ஸ்ரீ ரெங்கநாதன்,வக்கீல் தெய்வலிங்கம்,சேலம் மாநகர துணை செயலாளர் அழகாபுரம் முரளி,பத்திர எழுத்தர் நாராயணன்,ஜான்,பிரகாஷ்,சரவணன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.பின்னர் இவர்களை சேலம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நடுவர் இவர்கள் 8 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா,தாதை கார்த்தி,கவுசிகnullபதி, கவுன்சிலர் ஜிம்ராமு உள்பட பலரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வீரபாண்டி ஆறுமுகம்,பாரப்பட்டி சுரேஷ்குமார்,முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன்,சேகர் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி தற்போது வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நேற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விடுதலையாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024