முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை: கருணாநிதி உதட்டளவில் ஆதரவு

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,செப்.7 - இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவை தெரிவித்தார் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. இலங்கை இறுதிக் கட்ட போரின் போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன. இலங்கை தமிழர்களுக்காக அந்த கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006 ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாக பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
2007 நவம்பர் 20 ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் தி.மு.க தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலை புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையை கடைப்பிடித்தார். கட்சி தொண்டர்களையும், காங்கிரசையும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே. அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும் அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்