முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா மகன் வீட்டில் ரெய்டு

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சண்டிகர்,செப்.10 - முன்னாள் தமிழக ஆளுனர் பர்னாலாவின் மகன் சுகன்ஜித் பர்னாலா. இவருடைய வீட்டில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். தமிழக ஆளுனராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் பர்னாலா. பஞ்சாப் திரும்பிய அவர் மீண்டும் அரசியலில் குதித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் காங்கிரசையும் ஒரு பிடி பிடித்தார். இந்த நிலையில் அவரது மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டை நடத்தினர். பர்னாலாவின் மகன் சுகன்ஜித் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மனோகர்சிங் என்பவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர ரெய்டு நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்