முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக நிர்வாகி மின்னல் கொடி மீது குண்டர் சட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.11 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக நிர்வாகி மின்னல் கொடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  கடந்த திமுக ஆட்சியின் போது நிலஅபகரிப்பு உள்பட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர்கள் மீது தொடர்ந்து வரும் புகார்களை தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, ஒச்சுபாலு, எஸ்ஸார்கோபி, ஈஸ்வரன், மண்டல தலைவர் வி.கே.குருசாமி ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மின்னல் கொடி மீதும் நேற்று குண்டர் சட்டம் போடப்பட்டது.

   நில அபகரிப்பு தொடர்பாக மின்னல் கொடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து மின்னல்கொடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரெண்டு அஸ்ராகார்க், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் பேரில் மின்னல் கொடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மின்னல் கொடிக்கும், சிறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்