முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையை தகர்க்க அமெரிக்க -கேரள அரசு ஒப்பந்தம்- வை.கோ தகவல்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,செப்.- 17-  மதுரை மாவட்டம் மேலூரில் மதிமுக புறநகர் மாவட்ட செயலாளரின் மகள், மறைந்த மதிமுக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வீர.இளவரசனின் அண்ணன் வீர.தமிழ்செல்வன் மகளின் திருமண விழாவிற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவர் கூறியதாவது, கேரள அரசு முல்லைபெரியாறு அணையை தகர்க்க அமெரிக்க கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை சுட்டிக்காட்டினார். கேரள அரசு செப்டம்பர் 6-ம் தேதி ஒரு கூட்டத்தில் கேரள நீர் பாசனதுறை அமைச்சர் பரமேஸ்வர நாயர் கூறிய போது முல்லைபெரியாறு அணையை 2 இடத்தில் உடைக்க வேண்டும் என்று கூறியதாகஅவர் கூறினார்.தமிழகத்திற்கும் தமிழக விவசாயிகளுக்கும் துரோகம் செய்யும் இச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரள செல்லும் சாலையை துண்டிக்க வேண்டும். மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்