முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தை பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மாலைஅணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை.செப்.- 17 - தந்தை பெரியார் 133-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திராவிடர் இயக்கத்தின் ஸ்தாபகர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று (செப்.17) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க., திராவிடர் கழகம், தி.மு.க. உட்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக அரசின் சார்பிலும் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்