எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.-18 - தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் மாநில க”ங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்துள்ள“ர். தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய செயலாளரும், மேலிட பார்வையாளருமான கிருஷ்ணமூர்த்தி, குமரி அனந்தன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், டி.யசோதா, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சாய்லட்சுமி, சேவாதள தலைவர் கோவை செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, எம்.பி.க்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன், மாணிக்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ஜான்ஜேக்கப், பிரின்ஸ் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலை பற்றி ஆராயப்பட்டு அகில இந்திய தலைமைக்கும் தெரிவித்து, அவர்கள் ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்ற முடிவை அறிவிக்கிறோம். இந்த தேர்தலுக்காக மாநில, மாவட்ட தேர்தல் குழுக்கள் அமைக்கப்படும். 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். மேயர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.500, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு ரூ.3 ஆயிரம், பஞ்சாயத்து னியன் கவுன்சிலருக்கு ரூ.1,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை, பார்வையாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.
மாவட்ட குழுக்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களை மாநில குழுவுக்கு அனுப்பும். மாநில குழு வேட்பாளர்களை அறிவிக்கும்.
இது தவிர 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ராஜீவ் காந்தி கொலையாளிகள் 3 பேருக்கும் சட்டத்தின்படி தண்டனை விதிக்க வேண்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கும், அரக்கோணம் அருகே ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பரமக்குடிக்கு காங்கிரஸ் குழு ஒன்று ஓரிரு நாளில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும்.
காங்கிரஸ் கட்சி அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட்டு வெற்றியை பெற மத்திய அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகம் பெற்ற பலன்களையும் எடுத்துக் கூறி மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதற்கு காங்கிரசார் முழுமூச்சுடன் பாடுபட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாங்கள் தனித்து போட்டியிட எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் எடுக்கப்படும் முடிவு அந்தந்த சூழலில் எடுக்கப்படுவது. கூட்டணி என்பது நிரந்தரமல்ல. இதில் எந்த குழப்பமும் இல்லை. மத்திய அளவில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் கூட்டணி தர்மப்படி தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் அவர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறோம்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.