முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங்கை சந்தித்து நலம் விசாரித்த அமிதாப்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

புது டெல்லி,செப்.20 ​ நம்பிககை ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமர்சிங்கை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். ஜாமீனில் வெளிவந்த அமர்சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் கிரியாட்டினின் அளவு அதிகரித்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமர்சிங்கின் நெருங்கிய நண்பரும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அமர்சிங்கின் உடல் நலம் விசாரித்தார். அமர்சிங்கின் உதவியால் பெரும் பணம் ஈட்டியவர்கள் இப்போது எங்குள்ளனர் என சில தினங்களுக்கு முன் பிரபல நடிகையும், எம்.பியுமான ஜெயப்பிரதா கேள்வி எழுப்பினார். இந்த பின்னணியில் அமர்சிங்கை மருத்துவமனையில் அமிதாப் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்