முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறை மீறலா? தேர்தல் ஆணையத்தின்கண்காணிப்பில்-அழகிரி

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,மார்ச்.- 7 - தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அலுவல் ரீதியாக சென்னைக்கு வந்த அழகிரி மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  தமிழக சட்ட பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிமுறைகளை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்போம் என்று கூறியிருந்தது. இப்போது அழகிரி தேர்தல் ஆணையத்தில் கண்காணிப்பில் சிக்கியுள்ளார்.
முன்னதாக கடந்த 2 ம் தேதி அலுவல் ரீதியாக மத்திய பிளாஸ்டிக் என்ஜீனியரிங் தொழில் நுட்ப கல்வி மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழகிரி சென்னை வந்தார். அதனை தொடர்ந்து மார்ச் 4 ம் தேதி அவர் மதுரைக்கு சென்று அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று தேர்தல் ஆணையத்தின் நோட்டீசில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு இன்றைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தவறினால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்