முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ரோசய்யா இன்று ஊட்டி வருகிறார்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி,செப்.22 - தமிழக கவர்னராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ரோசய்யா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். கோவையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்துள்ள ஆளுநர் ரோசய்யா இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார். ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கும் அவர் தனது குடும்பத்தாருடன் நாளை(23-ந் தேதி)காலை ஊட்டியின் சுற்றுலா ஸ்தலங்களான தொட்டபெட்டா, அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் குன்னூரில் சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிடுகிறார். அதன்பின்னர் 24-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று அப்பர் கார்குடியில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து 25-ந் தேதி காலை ஊட்டியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார்.

கவர்னர் நீலகிரிக்கு வருவதையொட்டி அவர் தங்கும் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை பொலிவு படுத்தப்பட்டுள்ளது. கவர்னரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊட்டியில் காலநிலை அடிக்கடி மாறிவருவதால் கவர்னர் ஹெலிகாப்டரில் வருவாரா அல்லது காரில் வருவது என்பது முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்