முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி.சரணுக்கு முன்ஜாமீன் கொடுக்க கூடாது

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - சினிமா தயாரிப்பாளரும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் மீது கவர்ச்சி நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எஸ்.பி.பி.சரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

இதற்கிடையில் எஸ்.பி.பி.சரணுக்கு முன்ஜாமீன் கொடுக்க கூடாது என்று நடிகை சோனா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேனாம்பேட்டையில் உள்ள யுனிக் இன்டீரியர் மற்றும் டிசைனிங் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருகிறேன். சினிமா படமும் தயாரித்து வருகிறேன். மங்காத்தா பட வெற்றியை அடுத்து நடிகர் வைபவ் படத்தில் நடித்த சக நடிகர்களுக்கு மது விருந்து கொடுத்தார். இதில் நானும் கலந்து கொண்டேன். இந்த விருந்தில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பி.சரண் என்னிடம் தவறாக பேசி நடந்து கொண்டார். எல்லா நடிகைகளும் `கால் கேர்ள்' தான். இன்றைய இரவை என்னிடம் பகிர்ந்து கொள்கிறாயா? என்று அவர் என்னிடம் கேட்டார். 

இதை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் என் உடலில் கைவைத்து தவறாக நடந்து கொண்டார். இந்த நிலையில் நான் அங்கிருந்து வெளியேறினேன். இந்த சம்பவத்துக்கு எனது தோழி வரலட்சுமியும், கார் டிரைவர் அமரனும் சாட்சியாவார்கள். சரண் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகவும் மனஉளைச்சலை உண்டாக்கியுள்ளது. அவர் அவ்வாறு நடந்துகொண்டது திட்டமிட்ட ஒன்றாகும். மேலும் இது பெண்கள் சமுதாயத்திற்கு எதிரானது. இதுகுறித்து நான் போலீசில் புகார் தெரிவித்த பிறகு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பலர் என்னை போனில் மிரட்டி வருகின்றனர். இதனால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே எஸ்.பி,பி.சரண் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். நடிகை சோனா சார்பில் வக்கீல் தங்கசிவன் தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்