முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீராண்டி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் மறைவுக்கு இரங்கல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வி.பி.பரசுராமன் மறைவிற்கும், தாம்பரம் நகர இளைஞர் பாசறை துணைத்தலைவர் பி.எம்.ஜெ.சிவகுமார் மறைவிற்கும, கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் வி.பி.பரசுராமன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், தாம்பரம் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர் பி.எம்.ஜெ.சிவக்குமார் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்திக் கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர்கள் பரசுராமன், சிவக்குமார் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்