முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ ஆதாரங்களை நடிகை சோனா வழங்கினார்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 22​ எஸ்.பி.பி. சரண் மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பமாக நேற்று கமிவனர் அலுவலகம் வந்த நடிகை சோனா பாலியல் தொந்தரவு குறித்த வீடியோ ஆதாரங்களை கூடுதல் ஆணையரிடம் வழங்கினார். எஸ்.பி.்பி. சரண் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் பிரச்சனையை விட்டு விடுவதாக கூறினார். இது குறித்த விபரம் வருமாறு: தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டில் சரண் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.   இந்த நிலையில் சோனா நேற்று காலை எழும்ரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் சோனா நிருபர்களிடம் கூறியதாவது:​   எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன்.  நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோ ஆதாரத்தை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன்.   நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறு சோனா கூறினார். 

பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:​

கேள்வி:​ எஸ்.பி.பி. சரணிடம் நீங்கள்தான் பாலியல் உணர்வை தூண்டியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதே? 

பதில்:​ யார் குற்றவாளி என்பது என் வீடியோ ஆதாரத்தில் தெளிவாக உள்ளது. 

அந்த வீடியோவே இந்த கேள்விக்கு பதில் சொல்லும்.  

கே:​ இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?

ப:​ இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் நான் விடமாட்டேன். 

கே:​ வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா? 

ப:​ அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். நேற்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. இன்று பார்ப்போம். இவ்வாறு சோனா கூறினார்.

எஸ்.பி.பி. சரண்- சோனா மோதல் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைபோல் சூடு ிடித்து வரும் வேளையில் திரைத்துறையில் உள்ள முக்கிதஸ்ர்கள் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று கருத்தும் எழுந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago