முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவராத்திரியை முன்னிட்டு பழனியில் தங்கத்தேர் நிறுத்தம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,செப்.24 - பழனியில் வரும் 28 ம் தேதி நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு 9 நாட்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் 28 ம் தேதி நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு உச்சிக் காலத்தின் போது மலைக்கோயிலில் அனைத்து தெய்வங்களுக்கும் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மலைக்கோயிலில் கோவர் சன்னதியில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் அடிவாரம் புலிப்பானி ஆசிரமத்திற்கு எழுந்தருள்கிறார். விழாவை முன்னிட்டு மலைக்கோயிலின் சிறப்பு மிக்க தங்கத் தேர் புறப்பாடு வரும் 28 ம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது. இந்த தேதிகளில் தங்கத் தேர் புறப்பாட்டிற்கு பணம் கட்டியுள்ள பக்தர்கள் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள திருக்கோயில் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் ராஜா, துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்