முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் திமுக வேட்பாளரை மாற்றக்கோரி உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், செப்.25 - நாகர்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் மேரி ஜெனட் விஜிலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை மாற்றக்கோரி நகர மகளிரணி துணைச் செயலாளர் லதா, மாவட்ட துணை அமைப்பாளர் பொன்.மாரியம்மாள் ஆகியோர் நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டம் குறித்து நாகர்கோவில் நகர மகளிரணி துணைச் செயலாளர் லதா பேசும்போது கூறியதாவது;​- நான் 1996 லிருந்து திமுகவில் உறுப்பினராகி கட்சிப்பணியாற்றி வருகிறேன். அது மட்டுமல்ல 2002 லிருந்து கட்சியில் களப்பணியாற்றி வருகிறேன். கட்சியின் சார்பில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்துள்ளேன். ஆனால் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேரிஜெனட்விஜிலாவின் கணவர் ஜெய்சிங் தான் கட்சிக்காரர் மேரி ஜெனட்விஜிலா கட்சியில் சமீபத்தில் தான் சேர்ந்தார். நேற்று வரை மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனும், சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் ஜி.எம்.ஷாவும் எனக்குதான் சீட் என்று கூறிவிட்டு இன்று மாற்றியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்