முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு அம்பேத்கர் ஜனநாயக பேரவை ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.25 - நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வுக்கு அம்பேத்கர் ஜனநாயக பேரவை தங்களது அமோக ஆதரவைத்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைவர் ஜெ. நாகஷனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆதி ஆந்திரா மற்றும் அருந்ததி மக்களாகிய நாங்கள் சென்னையில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றோம்.  கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் எங்கள் சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் நன்மைகள் நடக்கவில்லை.  முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தற்போது படிப்படியாக எங்களுக்கு நன்மைகள் நடந்துக் கொண்டு வருகின்றது. இவ் வகையில் திட்டங்கள் செயலாற்றிவரும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை மனதாரப் பாராட்டுகின்றோம். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில்,  அம்பேத்கார் ஜனநாயக பேரவை தங்களது ஆதரவை அ.இ.அ.தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற  வகையில் அளிப்பதாக தெரிவித்துள்ளது.  இக்பேரவை பொதுக்குழு கூட்டத்தில் அம்பேத்கர் ஜனநாயக பேரவை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்து கின்றோம்.இவ்வாறு தலைவர் நாகnullஷனம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்