எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை செப், 25 - ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பாரட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்திற்கு பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
இளம்பெண்கள் பாசறை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செறியன், ஈ.வி.கே. சுலோசனா சம்பத், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தம்பிதுறை எம்.பி. ஆதிராஜாராம், ராஜலட்சுமி எம்.எல்.ஏ. மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.
கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் யாவரும் திரளாக கலந்து கொண்டனார்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசணை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவின் எல்லையற்ற அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படாமல் இந்திய திருநாடு முழுமைக்கும் பயன்பெறும் வகையில் கூடிய விரைவில் ஜெயலலிதா அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் ஏகபோக குடும்ப ஆட்சி நடத்தி வந்த கோபாலபுரத்து கோமாளியும் அவரது மைனாரிட்டி தி.மு.க ஆட்சியையும் வீழ்த்திகாட்டி தமிழக மக்களை மிகப்பெறும் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருள் படிந்துகிடந்த அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியோற்றி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் மூலம் பணிவோடு பாராட்டி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழத்து அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சுட பாடுபடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் திட்டமாக பாமரர் முதல் படித்தவர் வரை யாவரும் பயன்பெறும் வகையில் மக்களின் மனத்துயரமெல்லாம் நீங்கும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடியாக அரசானையை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை உளம் கனிந்த நன்றியோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தை, சிறப்போடு சீரமைத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை போல ஏழை எளிய பாமரமக்கள் சிகிச்சை பெறும் வகையில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டு தெருவிக்கின்றது.
கடந்த மாதம் அமெரிக்கா ஏகாதிபத்திய வல்லரசு நாட்டின் அதிபர் ஹில்லாரி கிளின்டன் சந்தித்து வாழ்த்து கூறியதையும் தமிழர் நலனே தன் நலன் என்று கருதி அதற்காக தமிழ் நாட்டிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத மிகுந்த துணிச்சலுடன் தமிழக சட்டமன்றத்திலே போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பெருமையோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
ஏழை எளிய மாணவர்கள் ,அரசு சார்ந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க கனவில் மட்டுமே நினைத்திருந்த மடிக்கணிணியை விலையில்லா பொருளாக வழங்கி மாணவ மாணவியர் அவர்களது வாழ்வில் அறிவு ஒளியேற்றிய ஜெயலலிதா இக்கூட்டம் பணிவுடன் பாராட்டுகின்றது.
தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போனதால் தமிழகத்தில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமணம் என்பதே எட்டா கனியாக இருந்துவந்த சூழ்நிலையை உணர்ந்த முதல்வர் அம்மா அவர்கள் ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- பணமும் தந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியும், கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிகள், தாய்மார்கள் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி அதில் வரும் வருமானங்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம், விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிவருகின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியோடு இளைஜர் பாசறை - இளம்பெண்கள் பாசறை பணிவோடு பாராட்டு தெரிவிக்கின்றது.
இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.