எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். 25 - சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி கண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அட் போட்டியின் 2வது நாளான நேற்று சென்னையில் 2 போட்டிகள் நடைபெற்றன. ஙூஏ பிரிவு அணிகளுக்கான இதில் ஒரு முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரவு 8 மணிக்கு துவங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்வதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் ஹசியும், முரளி விஜயும் களம் இறங்கினர். எதிரணியில் இருந்து மலிங்கா முதல் ஓவரை வீசி துவக்கினார். இவர் 5வது ஓவரை மீண்டும் வீசியபோது விஜய் கிளீன் போல்டானார். முதல் விக்கெட்டாக விஜயை சென்னை அணி இழந்த போது 28 ரன்கள் பெற்றிருந்தது.
இதன்பிறகு ஹசியுடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை அரை சதத்திற்கு உயர்த்தி, 63 ரன்களுக்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா பொல்லார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் 16 ரன்கள் பெற்று ஆட்டமிழக்க, ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹசியுடன், அணியின் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். தோனி அதிரடியாக விளையாடி 13 பந்துகளை மட்டும் சந்தித்து அதில் 22 ரன்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக 81 ரன்களுக்கு உயர்ந்த ஹசி, அணியின் ஸ்கோர் 144 ரன்களுக்கு உயர்ந்த போது ஆட்டமிழந்தார். ஹசி 57 பந்துகளில் 3 அபார சிக்சர்களை விளாசியும், 8 பவுண்டரிகளை வெளுத்தும் ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.
அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
இதன் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியவர்களில் ஜேக்கப்ஸ் 18 ரன்களும், பிளிசார்ட் 28 ரன்களும் பெற்றுதந்தனர். அடுத்து வந்த சுமன், ராயுடு, சைமண்ட்ஸ் ஆகியோர் மிக சொற்பமான ரன்களிலேயே அவுட்டானார்கள்.
துவக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகிவிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் கைவிட்டநிலையில், பவுலர்களான ஹர்பஜன் சிங்கும், மலிங்காவும் ஜோடி சேர்ந்து முடிந்த மட்டும் மோதிப்பார்ப்போம் என்ற பாணியில் அதரடி தாக்குதல்கள் நடத்தினர். இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக அரை சதத்திற்கும் மேல் குவித்தனர்.
கடைசி ஓவரை போலிஞ்சர் வீச, அதில் மட்டும் இந்த அணி வெற்றி பெற்ற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மலிங்கா அபாரமாக விளையாடி 2 பவுண்டரிகள் அடித்து இறுக்கத்தை அதிகரித்தார். கடைசி 2 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில் எளிதில் அடித்து மும்பை அணியை வெற்றிக்கு கொண்டுசென்றார். 1 பந்து கைவசம் இருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டது.
கடைசி சில ஓவர்கள் வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, கடைசியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மும்பை அணியில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 19 ரன்களும், மலிங்கா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் பெற்றுத்தந்தனர். மலிங்கா 18 பந்துகளில் 3 அபார சிக்சர்கள் விளாசியும், 3 பவுண்டரிகள் அடித்தும் ரன் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியை தோற்கடித்தது. டாசில் வென்ற நியூ சவுத்வேல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்த அணிக்கு வாட்சன் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் பெற்றுத்தர, ஸ்மித் 24 ரன்களும், வார்னர் 20 ரன்களும் பெற்று அவுட்டானார்கள்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட களம் இறங்கிய கேப் கோப்ராஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கோப்ராஸ் அணிக்கு கிப்ஸ் 55 ரன்களும், லெவி 43 ரன்களும் பெற்றுத்தந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.