முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமறைவாக இருந்த வரிச்சியூர் செல்வம் கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.25 - பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த வரிச்சியூர் செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை அருகே உள்ள வரிச்சியூரை சேர்ந்த செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை அண்ணாநகர் போலீஸ் சரகத்தில் கடந்த 2005 ம் ஆண்டு தொடரப்பட்ட திருட்டு வழக்கு ஒன்றிலும், 2007 ல் தொடரப்பட்ட திருட்டு வழக்கிலும் கைதானவர் இவர். 2008 ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கிலும், அடிதடி, தகராறு தொடர்பான வழக்கிலும் வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குகள் மதுரை 6 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் ஆஜராகாமல் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரிச்சியூர் செல்வத்தை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சொந்த ஊரான வரிச்சியூருக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் வந்திருந்த போது போலீசார் கைது செய்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்