முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். - 26 - தமிழகத்தில் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் பொது இடங்களிலோ, தொடர் வண்டிகளிலோ, பேருந்துகளிலோ, இதர வாகனங்களிலோ சந்தேகப்படும்படியான பொருட்களையோ, சந்தேகப்படும்படியான நபர்களையோ பார்த்தால் உடனே காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருளை கண்டால் பொதுமக்கள் அதனை கையாளவோ, திறக்கவோ வேண்டாம். அதனை சுற்றி கூட்டம் கூடாமலிருப்பதுடன் காவல் துறையினர் வருகைக்காக காத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களுக்கு சந்தேகப்படும் பொருள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்பிக்க வேண்டும்.  இன்டர்நெட் கஃபே நடத்துவோர் தங்கள் மையங்களுக்கு வருவோரின் அடையாளம் குறித்த ஆவணங்களை பரிசோதித்து வருகையை பதிவு செய்வதுடன் சந்தேகப்படும்படியானவர்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தர வேண்டும். கைப்பேசிக்கான இணைப்புகள் மற்றும் சேவைகள் வழங்குபவர்கள் அத்தகைய இணைப்புகளை வழங்கும் முன் விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை உரிய ஆவணங்களுடன் சரிபார்த்த பின்னரே வழங்க வேண்டும்.  உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்படுவோரின் பாதுகாப்பு குறித்து காவல் துறையினரின் அறிவுரையை கடைப்பிடிக்க வேண்டும். தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்குபவர்களின் அடையாளத்தை அவர்களின் அடையாள அட்டை போன்றவற்றை சரிபார்த்த பின்னரே தங்க இடமளிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கை பற்றி காவல்துறைக்கு தகவல் தர வேண்டும். தகவல்களை குறிப்பாக அவசரமானவற்றை தொலைபேசி எண் 100-க்கோ அல்லது காவலர்களுக்கோ உடனடியாக தெரிவிக்கலாம். அவசரமற்ற தகவலை காவல்துறையினரின் இணைய முகவரியான (கீசிசிஙீ:ஞூஞூசூசூசூ.சிடூஙீச்ங்டுஷடீ.கிச்சு.டுடூ) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். முன்னுதாரணமாக இருப்போம். நாட்டை காக்க உதவுவோம். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்