முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் 20 - 20 கிரிக்கெட் சாம்பியன் சென்னைக்கு அதிர்ச்சி அளித்த மும்பை மலிங்கா அபார ஆட்டம்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப். - 26 - சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி கண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.  சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியின் போட்டியின் ஙூஏ பிரிவு அணிகளுக்கான முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை அணியின் கேப்டன் சச்சின் காயம் காரணமாக இந்த தொடரில் கலந்துகொள்ளாததால் அவருக்கு பதிலாக ஹர்பஜன்சிங் தலமை பதவியை வகித்தார்.  இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட் செய்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் ஹசியும், முரளி விஜயும் களம் இறங்கினர். இவர்கள்  மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளித்து ஓரளவு சிறப்பாக  ரன்களை எடுத்தனர். இந்நிலையில் போட்டியின்  5-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசியபோது விஜய் கிளீன் போல்டானார். முதல் விக்கெட்டாக விஜயை சென்னை அணி இழந்த போது 28  ரன்கள் பெற்றிருந்தது.  இதன்பிறகு ஹசியுடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை அரை சதத்திற்கு உயர்த்தியது. ஸ்கோர்  63 ரன்களுக்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா பொல்லார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் 16 ரன்கள் எடுத்து அஹமதுவின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்க, ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹசியுடன், அணியின் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய ஹசி 57 பந்துகளில் 3 சிக்சர்கள்  மற்றும் 9 பவுண்டரிகளுடன்   81 ரன்களை எடுத்திருந்தபோது அஹமதின் பந்தில் பிலிஸார்டால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து தோனியுடன் மோர்கெல் ஜோடி சேர்ந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்திருந்தது.  தோனி அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.    அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. 

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியவர்களில் ஜேக்கப்ஸ் 18 ரன்களும், பிளிசார்ட் 28 ரன்களும் பெற்றுத்தந்தனர். அடுத்து வந்த சுமன், ராயுடு, சைமண்ட்ஸ் ஆகியோர்  சொற்பமான ரன்களிலேயே அவுட்டானார்கள். 

துவக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகிவிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் கைவிட்டநிலையில், பவுலர்களான ஹர்பஜன் சிங்கும், மலிங்காவும் ஜோடி சேர்ந்து முடிந்த மட்டும் மோதிப்பார்ப்போம் என்ற பாணியில் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த ஜோடி  பார்ட்னர்ஷிப்பாக அரை சதத்திற்கும் மேல் குவித்தது.

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. அந்த ஓவரை சென்னை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் வீசினார். அதில் மட்டும் இந்த அணி வெற்றி பெற்ற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மலிங்கா அபாரமாக விளையாடி 2 பவுண்டரிகள் அடித்து இறுக்கத்தை அதிகரித்தார். கடைசி 2 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில் எளிதில் அடித்து மும்பை அணியை வெற்றிக்கு கொண்டுசென்றார்.  1 பந்து கைவசம் இருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டது. 

கடைசி சில ஓவர்கள்  வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, கடைசியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

மும்பை அணியில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 19 ரன்களும், மலிங்கா 18 பந்துகளில் 3 அபார சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் அடித்தனர். இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்த மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பலம்பொருந்திய சென்னை அணியை வீழ்த்தியது.  பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியை தோற்கடித்தது. டாசில் வென்ற நியூ சவுத்வேல்ஸ் அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்த அணிக்கு வாட்சன் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் பெற்றுத்தர, ஸ்மித் 24 ரன்களும், வார்னர் 20 ரன்களும் பெற்று அவுட்டானார்கள். 

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையா

டிய கேப் கோப்ராஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை  எட்டியது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி கண்டது. கோப்ராஸ் அணிக்கு கிப்ஸ் 55 ரன்களும், லெவி 43 ரன்களும் பெற்றுத்தந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்