எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். - 26 - சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி கண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியின் போட்டியின் ஙூஏ பிரிவு அணிகளுக்கான முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை அணியின் கேப்டன் சச்சின் காயம் காரணமாக இந்த தொடரில் கலந்துகொள்ளாததால் அவருக்கு பதிலாக ஹர்பஜன்சிங் தலமை பதவியை வகித்தார். இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட் செய்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் ஹசியும், முரளி விஜயும் களம் இறங்கினர். இவர்கள் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளித்து ஓரளவு சிறப்பாக ரன்களை எடுத்தனர். இந்நிலையில் போட்டியின் 5-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசியபோது விஜய் கிளீன் போல்டானார். முதல் விக்கெட்டாக விஜயை சென்னை அணி இழந்த போது 28 ரன்கள் பெற்றிருந்தது. இதன்பிறகு ஹசியுடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை அரை சதத்திற்கு உயர்த்தியது. ஸ்கோர் 63 ரன்களுக்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா பொல்லார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பத்ரிநாத் 16 ரன்கள் எடுத்து அஹமதுவின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்க, ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹசியுடன், அணியின் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய ஹசி 57 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்திருந்தபோது அஹமதின் பந்தில் பிலிஸார்டால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து தோனியுடன் மோர்கெல் ஜோடி சேர்ந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்திருந்தது. தோனி அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியவர்களில் ஜேக்கப்ஸ் 18 ரன்களும், பிளிசார்ட் 28 ரன்களும் பெற்றுத்தந்தனர். அடுத்து வந்த சுமன், ராயுடு, சைமண்ட்ஸ் ஆகியோர் சொற்பமான ரன்களிலேயே அவுட்டானார்கள்.
துவக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகிவிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் கைவிட்டநிலையில், பவுலர்களான ஹர்பஜன் சிங்கும், மலிங்காவும் ஜோடி சேர்ந்து முடிந்த மட்டும் மோதிப்பார்ப்போம் என்ற பாணியில் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக அரை சதத்திற்கும் மேல் குவித்தது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. அந்த ஓவரை சென்னை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் வீசினார். அதில் மட்டும் இந்த அணி வெற்றி பெற்ற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மலிங்கா அபாரமாக விளையாடி 2 பவுண்டரிகள் அடித்து இறுக்கத்தை அதிகரித்தார். கடைசி 2 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில் எளிதில் அடித்து மும்பை அணியை வெற்றிக்கு கொண்டுசென்றார். 1 பந்து கைவசம் இருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டது.
கடைசி சில ஓவர்கள் வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, கடைசியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மும்பை அணியில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 19 ரன்களும், மலிங்கா 18 பந்துகளில் 3 அபார சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் அடித்தனர். இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்த மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பலம்பொருந்திய சென்னை அணியை வீழ்த்தியது. பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியை தோற்கடித்தது. டாசில் வென்ற நியூ சவுத்வேல்ஸ் அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்த அணிக்கு வாட்சன் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் பெற்றுத்தர, ஸ்மித் 24 ரன்களும், வார்னர் 20 ரன்களும் பெற்று அவுட்டானார்கள்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையா
டிய கேப் கோப்ராஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி கண்டது. கோப்ராஸ் அணிக்கு கிப்ஸ் 55 ரன்களும், லெவி 43 ரன்களும் பெற்றுத்தந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.