முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் பாதுகாப்பு படையினருடன் மோதல் 13 தீவிரவாதிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மணிலா,செப்.- 27 - பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 13 தீவிரவாதிகள் பலியானார்கள்.  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தில் ஹிலிடாலிப்போ நகரத்தில் துப்பாக்கி ஏந்தி வந்த 50 தீவிரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 13 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரு கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர் என்று கடற்படை தலைவர் ரோமியோ டெனால்கொ கூறினார். இத்தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்த தீவிரவாதிகள் அல் காய்தா தீவிரவாத இயக்கத்தினரால் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் ஹடீப் காரியாவை தலைவனாக கொண்ட புதியதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத இயக்கம் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கால் ரான்டோல்ப் கூறினார். அப்பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சி பணிகளை எதிர்த்தே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று டெனால்கொ கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்