முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க்,செப்.- 28 - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி ஹர்வும் நியூயார்க் நகரில் சந்தித்து பேசினர். அமெரிக்காவின் பொருளாதார நகரான நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சென்றிருந்தார். நியூயார்க் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. இதில் எஸ்.எம்.கிருஷ்ணாவும் ஹினாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் சந்தித்து பேசினர்.
சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த கிருஷ்ணா பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஹினாவுடன் சந்திப்பு நன்றாக இருந்தது. சமூதாய வளர்ச்சிக்கான கருத்துக்களை பரிமாற்றம் செய்வதால் இருநாடுகளிடையே உறவு சீரடைவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது என்றார். விருந்தில் நான் கலந்துகொண்டதற்கு பாகிஸ்தான் குழுவினரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இருநாடுகளிடையே கலாசாரம், மொழி ஆகியவைகளை பரிமாறிக்கொள்வது உறவுக்கு நல்லது என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா மேலும் கூறினார். பாகிஸ்தான் வெளியுறவு புதிய பெண் அமைச்சர் ஹினா சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்தார். அதன் பின்னர் அவரும் கிருஷ்ணாவும் நியூயார்க் நகரில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்