முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வச்சாத்தி சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க கம்யூ. கோரிக்கை

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,அக்- .1 - வச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. 19 ஆண்டுகள் நியாயத்துக்காக விடாப்பிடியாக போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்துக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். வாச்சாத்தியில் அரசு துறையினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான மலை கிராம மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்