முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.2 நினைவு நாள்: காமராஜர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 3  - காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்கு அரும்பணியாற்றி கர்மவீரர் என போற்றப்பட்ட காமராஜரின் 37-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பைச்சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அவரது நினைவு நாளையொட்டி அந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு இன்று காலை காமராஜர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் தலைமை நிலையச்செயலாளர் தாமோதரன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வந்திருந்தனர். அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி சார்பில் அதன் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ.தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.ஜெயபிரகாஷ், துணைபொதுச் செயலாளர் ஏ.என்.சுந்தரேசன், அரசியல் ஆலோசகர் எஸ்.ரவீந்திரன் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் கே.ரகுபதி, வர்த்தக அணி செயலாளர்கள் அமுதன், சேவியர், சுதாகர், நாதன், சமத்துவ சரவணன், பாபு,ஆஸ்டின், கோவிந்தராஜ், தமிழ்ச்சாமி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் சர்மிளா, சுமித்ரா ஆகியோர் காமராஜருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக ஏ.நாராயணன் எம்.எல்.ஏ.நினைவிடத்தின் நுழைவு வாயிலில் உள்ள காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மலர்மாலை அணிவித்தார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தொழிலதிபர் எச்.வசந்தகுமார், தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மதுகாந்த், அக்கட்சியின் நிர்வாகிகள் என்.வி.சுப்பிரமணி, வெங்கட் உள்பட பலர் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, சாரநாத், சைதை 171 வார்டு வேட்பாளர் சைதை ஜேக்கப் ஆகியோர் தொண்டர்களுடன் காமராஜரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்