முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செ.ம.வேலுச் சாமியை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

கோவை, அக்.7 - தமிழகத்தில் முன்னோடி மாநகராட்சியாகளும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் நடத்திட அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காந்தி மாநகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது கூறினார். கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல் அமைச்சருமான ஜெயலலிதா முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை அறிவித்தார். அன்று முதல் கோவை மாநகராட்சி பகுதியில் செ.ம.வேலுச்சாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகர் மாவட்ட செயலாளர் தா.மலரவன் எம்.எல்.ஏ., மாநில அண்ணா தொழில் சங்க செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வீதி வீதியாக வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

நேற்று கோவை காந்தி மாநகர், கணபதி ஆகிய பகுதியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி பிரச்சாரம் செய்தார். 

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது.

தமிழ் நாட்டில் அம்மாவின் தலைமையில் பொற்காலை ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகமே வியக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். ஏழைகள் வாழ்வில் வறுமை நீங்கி செழிப் போடு வாழ வழிவகை செய்து வருகிறார்.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி போட்டியிடுகிறார். அவர் கோவை மாவட்டத்திற்கு மிகவும் அறிமுகமானவர் அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். சிறந்த நிர்வாகி அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் ஊழலற்ற திறமையான நிர்வாகம் செய்யவார். கோவை மாநகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அம்மா கொண்டடு வந்த இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டம் உடனே நிறைவேற்றுவார். இவ்வாறு கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தா.மலரவன் எம்.எல்.ஏ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்