முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ஆந்திர பெண் புரோக்கர் கைது: 2 அழகிகள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.7 - பிரபல நாளிதழில் விளம்பரம் கொடுத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபச்சாரம் செய்த பிரபல ஆந்திர பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார். விபச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த சில  தினங்களாக சென்னையில் பிரபல நாளிதழில் வெளியான பத்திரிக்கை விளம்பரத்தில் வந்த இன்டெர் எஸ்கார்ட்ஸ் மெஸோஜ்  என்ற தகவலை படித்துவிட்டு கார்த்திக் மற்றும் கிறிஸ்டோ என்ற இரண்டு நபர்கள் விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது விபச்சார கும்பலை சார்ந்த நபர் அவர்களை ஒரு இடத்திற்கு வரவைத்து அங்கிருந்து அவர்களை காரில் அழைத்து சென்று சர்வீஸ் அபார்ட்மெண்ட் வீட்டின் முதல் தளத்திற்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நேற்று முன்தினம் இரவு மேற்படி இடத்திற்கு ஜெ.ஜெ.நகர் ஆய்வாளர் சுரேந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் குஞ்சுபிள்ளை, செல்வவினாயகம், தலைமை காவலர்கள் தமீம், பெண்காவலர்கள் நாட்டாலம்மை, தனலெட்சுமி ஆகியோருடன் தொண்டு நிறுவன அலுவலர் ஜெபராஜ், சென்று பார்த்தபோது ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய விபச்சார கும்பலைச் சேர்ந்த ரகு (எ) ராகவேந்திராவ் மற்றும் பெண்டம்மா ஆந்திராவில் இருந்து வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு இளம் பெண்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

உடனே மேற்படி விபச்சார கும்பலையும், விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வாடிக்கையாளர்களான கார்த்திக் மற்றும் கிறிஸ்டோ என்பவர்களையும் போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். விபச்சார கும்பல் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப், புதிய மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஆகியவைகளை கைப்பற்றினர். 

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரை மீட்டனர். இது சம்மந்தமாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண்களை பாதுகாப்பாக அரசு மகளிர் காப்பகம் மைலாப்பூரில் போலீசார் ஒப்படைத்தனர். மேற்படி விபச்சார தொழிலை செய்து வந்த மிகமுக்கிய குற்றவாளியான பாலாஜி என்பவர் தலைமறைவாகிவிட்டதால் தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்