முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுவிக்கப்பட்ட தமிழ் அகதிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

காஞ்சிபுரம், அக்.7 - செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில் 15 இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகள் முடிவுற்றதாக கருதப்படுகிறது. வழக்குகள் முடிவடைந்த பின்னரும் இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உததரவிட்டது. 

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவசண்முகராஜா அந்த 15 பேரையும் விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்களுடைய உறவினர்கள் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாமிற்கும், சிலர் உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். விடுதலை அளித்து தங்கள் மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago