எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.8 - மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு உருவாக்கப்பட்டு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை குறித்து விரிவாக ஆராயப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் தமிழக குழுவினரிடம் தெரிவித்தார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில் இருந்தன. இந்த நிலையில், தங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் 19.9.2011 அன்று இந்தப் பிரச்சனை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடிதத்தில், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து, இந்தப் பிரச்சனை குறித்து ஒரு கோரிக்கை மனுவை அளிக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டார். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அன்று (19.9.2011) மாலையே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனைத் தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த பின், 21.9.2011 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, தான் இடிந்தகரை சென்று வந்த விவரத்தை எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் பிரதிநிதிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 21.9.2011 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கோரிக்கையை ஏற்று 22.9.2011 அன்று தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என பாரதப் பிரதமரை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், 22.9.2011 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூடி, கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வதென்று அமைச்சரவை தீர்மானித்தது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதனை அடுத்து, முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழுவை சந்திக்க 7.10.2011 அன்று(நேற்று) 12.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கி தந்தார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. குழுவினருக்கான விமானப் பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.
தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு பிரதமரை நேற்று (7.10.2011) சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது. இந்தக் குழுவில் அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு. தம்பிதுரை எம்.பி., துணைத் தலைவர் வா. மைத்ரேயன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சரவணபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா எம்.பி., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர்தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ., இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் கே. மணிகண்டன் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான தமிழகக் குழுவின் கருத்துக்களை கவனமுடன் கேட்டறிந்தார். பின்னர், நாட்டின் வளர்ச்சிக்கு மின் சக்தியின் தேவை எந்த அளவுக்கு இன்றியமையாததாக விளங்குகிறதோ, அதே அளவுக்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமும் முக்கியமானது என்று எடுத்துரைத்து, இந்தப் பிரச்சனையை ஒரே கூட்டத்தில் தீர்த்து விட முடியாது என்றும், எனவே, மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஒரு கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும் என்றும் பிரதமர் தமிழகக் குழுவிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.