எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, - 7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கை குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் வெளியிட்டார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறைக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் போது மிகவும் மலிவான கட்டணத்திற்கு தொலை தொடர்பு கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை குழுவும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியது.
ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு பின்னர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின் பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் இந்த இறுதி அறிக்கையில் மத்திய கணக்கு தணிக்கை குழு இணைத்துள்ளது.
இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும் இக்குழு விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் இக்குழு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி அறிக்கையில் தணிக்கை குழு குற்றம்சாட்டியுள்ளது.
மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள் தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை 3 விதமான ஆய்வுகளை நடத்தி தணிக்கை குழு மதிப்பீடு செய்துள்ளது.
முதலாவது முறையில் மதிப்பீடு செய்ததில் 122 லைசென்சுகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக கோரப்பட்ட தொகை ரூ. 65,725 கோடி. ஆனால் தொலை தொடர்பு துறை வசூலித்த தொகை வெறும் ரூ. 9,013 கோடி.
இரண்டாவது முறைப்படி 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு ஒதுக்கீட்டு ஏலத் தொகைக்கும் 2ஜி ஏலத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் கண்டறியப்பட்டது. அதன்படி பார்த்தால் 2ஜி ஒதுக்கீட்டிற்கு ரூ. 1,11,511 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் தொலை தொடர்பு துறை பெற்றது வெறும் ரூ.9,013 கோடி. இரட்டை தொழில்நுட்ப லைசென்சுக்கு ரூ. 40,526 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரட்டை தொழில்நுட்ப ஒதுக்கீட்டிற்கு தொலை தொடர்பு துறைக்கு கிடைத்தது வெறும் ரூ. 3,372 கோடி மட்டுமே.
மேற்கண்ட இரு மதிப்பீட்டு முறைகளின்படி பார்த்தால் அரசு கஜானாவுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1,39,652 கோடி.
மூன்றாவதாக சில கம்பெனிகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கும் மேல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையும் சேர்த்து மொத்தமாக பார்த்தால் அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ. 1,76,379 கோடி என்று அந்த இறுதி அறிக்கையில் புள்ளி விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கு கணக்கு தணிக்கை குழு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் கணக்கு தணிக்கை குழு கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம் மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகே ராசா பதவி விலகினார். தற்போது அவர் திஹார் சிறையில் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.