முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் இந்திய சகோதரர்கள் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

துபாய், அக்.8 - சவுதி அரேபியாவில் இந்தியாவைச் சேர்ந்த அண்ணன்,தம்பி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் அகமது யாசின்(46). இவரது தம்பி முகமது சக்கீர் அகமது(44). இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் செயல் அல்-சாகீர் நகரில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தனர். ஓட்டல் அதிபர் ஒருவர் இரும்பு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தாரிக்க இவர்களிடம் ஆர்டர் கொடுத்திருந்தார். ஆனால் இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து தரவில்லை. இதுகுறித்து ஓட்டல் அதிபருக்கும் அகமது யாசினுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் அகமது யாசினையும், அவரது தம்பி சக்கீர் அகமதுவையும் சரமாரியாக சுட்டார். அதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அப்போது இவர்களுடன் இருந்த மற்றொரு தம்பி காயமின்றி தப்பினார். அவர் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கியால் சுட்ட ஓட்டல் அதிபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்