முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முன்னாள் அமைச்சருக்கு தண்டனை அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக்.9 - சிறை விதிகளை மீறி தொலைபேசியை பயன்படுத்தியதால் கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை மேலும் சிறையில் 4 நாட்கள் இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ணபிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் தொலைக்காட்சி நிருபருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவருக்கு சொந்தமான பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட மறுநாள் இந்த தொலைபேசி சம்பவம் நடந்துள்ளது. 

சிறையில் இருக்கும் பாலகிருஷ்ணபிள்ளைக்கு செல்போன் போன்ற வசதிகள் அவருக்கு சிறை விதிகளை மீற தரப்பட்டுள்ளதாகவும் முக்கிய எதிர்க்கட்சியான இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான எதிர்க்கட்சி குழு ஆளுனர் பரூக்கிடம் மனு அளித்தனர். 

இந்நிலையில் பாலகிருஷ்ண பிள்ளை தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறை அதிகாரி கூடுதல் டி.ஜி.பிக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் சிறைத் துறை விதிகளை மீறி தொலைபேசியில் பேசிய பாலகிருஷ்ண பிள்ளையின் சிறைவாசம் மேலும் 4 நாட்கள் அதிகரிப்பட்ட விவரம் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்