முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் போராட்ட விவகாரம் - தாக்கரே எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

மும்பை,அக்.9 - விரோத போக்கில் ஈடுபட வேண்டாம் என்று அண்ணா ஹசாரேவுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க காந்தீய வழியில் அண்ணா ஹசாரே போராடி வருகிறார். இந்தநிலையில் மும்பையில் நேற்றுமுன்தினம் சிவசேனா கட்சி சார்பாக தசரா பண்டிகை பேரணி நடைபெற்றது. இதில் பால் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்ணாஹசாரேயின் போராட்டம் குறித்து குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தி வருவது கேலிக்கூத்து போன்றது. இந்த நாட்டில் ஊழலுக்கு முடிவே ஏற்படாது. ஊழலில் பெரும் மீன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. உங்களுடைய மீன் வலையில் மீனை பிடிக்க முடியாது. உங்கள் வலைதான் கிழிந்துபோகும். இல்லாவிட்டால் மீன்களாள் இழுத்துச்செல்லப்பட்டுவிடும் என்று தாக்கரே கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய ஹசாரே, பால் தாக்கரே ஒரு வயதானவர். அவருக்கு சுயநினைவு இல்லாமல் புலம்புகிறார் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்துள்ள பால்தாக்கரே, விரோத போக்கில் ஈடுபட வேண்டாம் என்று ஹசாரேவை எச்சரித்தார். நீங்கள், எனக்கு இளையவர்தான். உங்களுடைய நடவடிக்கைகள் குழந்தைத்தனமாக இருக்கக்கூடாது என்றும் பால் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். ஹசாரே கூறியுள்ளதற்கு சரியான பதிலடியை என்னால் கொடுக்க முடியும். நாம் இருவரும் காந்தீயவாதிகள் அல்ல. என்னைக்காட்டிலும் நீங்கள் எவ்வளவு இளமை என்பதை சொல்லுங்கள். என்னையை காட்டிலும் கொஞ்சம் இளமை என்பதற்காக குழந்தை போன்று நடந்துகொள்ளாதீர்கள் என்று பால் தாக்கரே மேலும் கூறியுள்ளார்.  இதனால் இருவருக்கும் மோதல் போக்கு முற்றும் நிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்