முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியா? குலாம் நபி மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.9 - ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படமாட்டாது என்று அந்த மாநில அரசியல் விவகாரத்தை கவனிக்கும் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் கடந்த 26 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. ரயில் மறியல் போராட்டம், பஸ் நிறுத்தப்போராட்டம், சாலை மறியல் போராட்டம்,பேரணி மற்றும் ஊர்வலம் என்று பல வழிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றிக்கொண்டே போகிறது. இதை சமாளிக்கும் வகையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, துணைமுதல்வர் டி.ராஜா நரசிம்மா ஆகியோர் டெல்லி சென்று ஆந்திர விவகாரத்தை கவனிக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்,மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர்களை சந்தித்து பேசினர். அப்போது தெலுங்கானா விவகாரம் மற்றும் போராட்டம் குறித்தும் விரிவான முறையில் விவாதித்தனர். அதன் பின்னர் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,ஆந்திரா கடற்கரை பகுதி மாவட்ட தலைவர்கள்,தெலுங்கானா பகுதி தலைவர்கள், ராயல்சீமா பகுதி தலைவர்கள் ஆகியோர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை ஒரு சில நாட்களில் முடியும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்றார். ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஆசாத் கூறினார்.  அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படுமா என்று கேட்டதற்கு சட்டென்று பதில் அளித்த ஆசாத், ஆந்திராவில் ஏன் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும். அந்த கேள்விக்கே இடமில்லை என்றார். ஆந்திராவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அந்த மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர்களும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்களும் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது என்று ராணுவ இணை அமைச்சரும் ஆந்திராவை சேர்ந்தவருமான பல்லம் ராஜூ பேட்டி அளிக்கையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago