முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக்.9  - மத்தியில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் ப. சிதம்பரம் ஆகியோரை டெல்லியில் நேற்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சந்தித்தார். அப்போது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர்களுடன் கிரண்குமார் ரெட்டி விவாதித்தார். இந்த விஷயத்தில் தனது கருத்துக்களையும் அவர் அமைச்சரிடம் கூறினார். இந்த ஆலோசனையின் போது பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோரும் உடனிருந்தனர். மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர். மற்றொரு அமைச்சர் பனகபாலெட்சுமி. இவர்களும் நேற்று பிரணாப் முகர்ஜி மற்றும் ப. சிதம்பரத்தை சந்தித்து பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்