முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதர்களிடம் ஆன்மீக வழிபாடு அவசியம்: துணை ஜனாதிபதி அன்சாரி

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 10 - மனிதர்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக மாற்ற ஆன்மீக வழிபாடு அவசியம் என்று துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கூறினார். டெல்லியில் நடந்த பிரம்ம குமாரிகள் சமாஜத்தின் 75 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது, மக்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒரு குடும்பமாக வாழ ஆன்மீக வழிபாடு அவசியமானதாகும். நமது வாழ்வியல் நடைமுறைகளை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் நல்லதொரு முன்னேற்றத்தை அடைய அது வழிவகுக்கும். பிரம்ம குமாரிகள் இயக்கமானது தற்போது உலகம் முழுவதும் செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர் என்றார் அவர். இந்து சமயத்தை சார்ந்த பிரம்ம குமாரிகள் இயக்கம் கடந்த 1937 ல் தொடங்கப்பட்டது. திருமணமாகாத பெண்கள் இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்