முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மூழ்கும் கப்பல் பா.ஜ.க. கருத்து

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா, அக். - 10 - ஊழல் புரையோடியுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் நீடிக்க அதன் கூட்டணி கட்சிகள் விரும்பாது என்று பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.  பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, ஊழல் மிக்க காங்கிரஸ் அரசில் அதன் கூட்டணி கட்சிகளான தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்காது. இதனால் சீட்டு கட்டு சரிவதை போல காங்கிரஸ் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். காங்கிரசின் ஊழலை தங்கள் முதுகில் சுமக்க வேண்டுமா என்ற கேள்வியும் அது குறித்து அமைதியின்மையும் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.  மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் அரசை விட்டு கூட்டணி கட்சியினர் விரைவில் வெளியேறுவர். பிரதமர் மன்மோகன்சிங்கின் கட்டுப்பாட்டில் மற்ற அமைச்சர்கள் இல்லை. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை தொடருமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு அறிவுறுத்தப்பட்ட கடிதம் வெளியாகி உள்ளது. 2 ஜி முறைகேட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும்.  பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சர் சிதம்பரம் ஆகியோரின் முழு சம்மதத்துடனேயே 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் ராசா தெரிவித்துள்ளார். அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி முறைகேட்டை ராசா ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது. விலை உயர்வு, பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது ஆட்சி மாற்றத்துக்கான குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி ஊழற்ற நிர்வாகம், தூய்மையான அரசியல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார் என்றார் ரூடி. பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக தான் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்கிறார் என்றகருத்தை ரூடி மறுத்தார். இந்த ரத யாத்திரை தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்