எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், அக். - 10 - ஏழை, எளிய பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா அம்மாவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர். தமிழக முதல்வராக 3 வது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு பல்வேறு நன்மைகளை தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்தோடு செய்து வருகிறார். பதவியேற்ற முதல் நாளன்றே ஏழு நல்ல காரியங்களை நிறைவேற்ற அவர் கையெழுத்திட்டது தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒன்று. ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், முதியோர்களுக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முதல் நாளன்றே கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மேலும் ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பையும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் அதை செயல்படுத்தியும் வருகிறார். நீலகிரி கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதிலாக மின்சார அடுப்பு வழங்கவும் அவர் கருணையோடு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஏழை பயனாளிகளுக்கு கறவை மாடுகள், 4 ஆடுகள் ஆகியவற்றையும் ஜெயலலிதாவின் அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து ஏழை பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இதனால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து சோர்ந்து போயிருந்த ஏழை தாய்மார்கள் இப்போது நம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஆடு, மாடுகள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியும் பெருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, தாய்மார்கள் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். இலவச ஆடுகள் பெற்ற சில தாய்மார்கள் முதல்வரை மனமுவந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த சிற்றம்பாக்கம் கிராமத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் முதல்வர் ஜெயலலிதாவை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாராட்டியுள்ளனர்.
எல். பிரேமா:
இந்த கிராமத்தில் வசிக்கும் எல். பிரேமா கூறுகையில், எனது கணவர் பெயர் லோகநாதன் எனது கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு பிள்ளைகள் கிடையாது. நான் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் இந்த ஆடுகளை 1 மாதத்திற்கு முன் அதிகாரிகளுடன் சென்று செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி சந்தையில் வாங்கினேன். 1 கடா ஆட்டையும், 3 பெண் ஆடுகளையும் அதிகாரிகளுடன் சென்று வாங்கினேன். இந்த 4 ஆடுகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம், ஆடுகளை பாதுகாக்க வீட்டின் அருகே கொட்டகை போடுவதற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தார்கள் அதிகாரிகள் என்றும் அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதா என்றும் எங்களுக்கு துணையாக இருப்பார்கள், அவரது கையால் ஆடுகளை வாங்கியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களால் கடைசி வரை ஜெயலலிதாவை மறக்க முடியாது என்றும் நா தழுதழுக்க கூறினார் பிரேமா.
பயனாளி யசோதா (50):
இவர் சிற்றம்பாக்கம் கிராமத்தில் வசிக்கிறார் இவர் வாய் பேசமுடியாத ஊமை. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். இவருக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கிறார். இவர் கூலி வேலை செய்கிறார். இவருக்கு தமிழக முதல்வர் 4 ஆடுகள் கொடுத்துள்ளார் என்பதை சைகை மூலம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார்.
பயனாளி முனியம்மாள் (62):
இவரது கணவர் பெயர் துரை . 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். முனியம்மாளுக்கு 4 ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உள்ளது. இவர் தனக்கு ஆடுகள் வழங்கப்பட்டது பற்றி கூறுகையில், பிழைப்புக்காக, வழி இல்லாத எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகள் வழங்கி உள்ளார். இந்த காலத்தில் பிள்ளைகளே பெற்றோர்களை கவனிப்பது கிடையாது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தாய் உள்ளத்தோடு ஏழை, எளிய மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்து வருகிறார் என்று கூறிய அவர், முதல்வர் ஜெயலலிதாவை நான் படுக்கும் போது கூட கடவுள் போல் நினைத்துக் கொண்டு படுக்கிறேன் என்று உணர்ச்சி மல்க கூறினார்.
பயனாளி பச்சையம்மாள் (36) :
நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் சம்பத். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளார். அவர் பெயர் ரமேஷ். முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகளை எனக்கு கொடுத்துள்ளார். 1 மாதத்திற்கு முன் ஆடுகளை செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி ஆட்டு சந்தையில் வாங்கினேன். இந்த ஆடுகள் 6 முதல் 9 மாதத்திற்குள் வளர்ந்து விடும் 2 ஆண்டுகள் வரை அவற்றை காப்பாற்றி விட்டால் ஆடுகள் பெருகிவிடும். பிறகு எங்களுக்கு கவலை இல்லை என்றும், ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஆடுகளை கால்நடை மருத்துவர் சோதனை செய்து வருகிறார் என்றும் கூறியதோடு எங்களை வாழ வைத்து பார்க்கும் அன்பு தெய்வம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
பயனாளி துரையம்மாள் (57):
என் கணவர் பெயர் தசரதன். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் காலமானார். எனக்கு 2 ஆண் பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் அனைவருக்கும் திருமணம் செய்து விட்டேன். நான் கூலி வேலை செய்து வருகிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த கிராமப்புற ஏழை, எளியோருக்கு ஆடு வழங்கும் திட்டம் மகத்தான திட்டம். அ.தி.மு.க ஆட்சி வந்த சில மாதங்களில் எங்களுக்கு 4 ஆடுகள் வழங்கியது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் எங்கள் வாழ்க்கை இனி மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் நன்றி பெருக்குடன் கூறினார்.
பயனாளி சுலோச்சனா (50):
என் கணவர் பெயர் ரத்தினம். அவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு 1 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் மகன் சுரேஷீக்கு வலது கால் உடைந்துள்ளது. மகள் அம்மு 8 ஆம் வகுப்பு படிக்கிறாள். நான் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்நிலையில் தமிழக முதல்வர் ஏழை எளியவர்களுக்கு கிராமப்புறங்களில் வாழும் பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வழங்கியது சந்தோஷமாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா பேர் சொல்லும் படி நலத்திட்டங்களை செய்து வருகிறார். சாகும் வரை நான் அவரை மறக்க மாட்டேன். நன்றியுடன் அவருக்கு இருப்பேன், இதுநாள் வரை நான் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில் இருந்தேன், கவலையாக இருந்தது. இப்போது முதல்வர் ஜெயலலிதா இலவசமாக 4 ஆடுகள் கொடுத்தது பெருமையாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது என்று கூறினார்.
பயனாளி முடியலா(48):
என் கணவர் பெயர் மூர்த்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காலமானார். 1பெண் உள்ளார். அவள் பெயர் சரிதா. அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வயிற்றுபிழைப்பு நடத்தி வருகிறேன், எனது பிழைப்புக்காக 4ஆடுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதை வைத்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவேன், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முதல்வரை மறக்கவே மாட்டேன். அம்மாவை நேரில் காணமுடியாத நிலையில் இருந்தேன். ஆனால் அம்மாவை திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில் நேரடியாக சந்தித்து அவரிடம் இருந்து 4 ஆடுகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நன்றி உணர்ச்சியோடு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமையன்று கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆடுகளை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஏதாவது குறைகள் இருந்தால், ஆடுகளுக்கு நோய் ஏற்பட்டால் உடனடியாக சொல்லுங்கள் மாத்திரை, மருந்துகள் தருகிறேன் என கேட்டு விட்டு செல்கிறார்கள் மருத்துவர்கள். திக்கில்லாத எங்களுக்கு அம்மாதான் எங்களுக்கு குல தெய்வம் என்றும் நாங்கள் இப்போது நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
ஆக, இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் வாழ்க்கையில் இப்போது நம்பிக்கையோடு வீரநடை போட்டு வருகிறார்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.