முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட-ஜி.ராமகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.- 10 - கோவை, துடியலூர் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் தனது கட்சிக்காரரின் வழக்கு சம்பந்தமாக துடியலூர் காவல்நிலையம் சென்று அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அவருக்கு முறையான பதிலளிக்காமல் அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 5 காவலர்கள் ஆனந்தீஸ்வரனை லத்தி மற்றும் ஹாக்கி மட்டையால் அடித்ததோடு nullட்ஸ் காலாலும் மிதித்துள்ளனர்.  இதன் விளைவாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட செய்தியறிந்த வழக்கறிஞர்கள் துடியலூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக காவல்துறை அதிகாரிகள் 5 பேர் தற்காலிக பணிnullநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துடியலூர் காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 தற்காலிக பணி nullநீக்கம் செய்யப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்யப்படுவதுடன், இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. காவல்துறையினர் பரமக்குடியில் நடத்திட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்ளிட்ட பல இடங்களில் வரம்பு மீறி செயல்பட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கோவையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் ஆகும். காவல்துறையினரின் அத்துமீறிய செயலை உடனடியாக தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago