முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார் நடிகர் தர்ஷன்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

பெங்களூர், அக். - 11 - கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார்.  கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி பெயர் விஜயலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இந்த நிலையில் இவரது மனைவி இவரை விட்டு விலகினார். நிகிதாதுக்ரல் என்ற நடிகையுடன் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து விஜயலெட்சுமி தர்ஷனுடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தையுடன் வெளியேறினார். இந்த நிலையில் கணவர் மீது விஜயலெட்சுமி போலீசில் புகார் செய்தார். கணவர் தன்னை அடித்து உதைத்ததாகவும், நடிகை நிகிதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் புகார் கூறினார். இதனால் கர்நாடக திரைப்படத் துறையினர் நிகிதாவை படங்களில் நடிப்பதற்கு தடை விதித்தனர். விஜயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டனர். எங்கள் வாழ்க்கையில் நடந்த கெட்ட காலத்தை நாங்கள் இருவருமே மறந்து விட்டோம். மீண்டும் அதை நினைத்து பார்க்க விரும்பவில்லை என்று நிருபர்களிடம் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் குடும்பமும் அருகில் இருந்தது. நடந்த சம்பவத்தை கெட்ட கனவாக மறந்து விட நினைக்கிறேன். எனது கோபம் காரணமாக இந்த தவறு நடந்து விட்டது. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களை நான் மறக்க மாட்டேன். எனது ரசிகர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் தர்ஷன்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்