எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 11- சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் `ஏ' பிரிவில் நியூ சவுத்வேல்ஸ், மும்பை இந்தியன்ஸ், `பி' பிரிவில் சோமர்செட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. லீக் சுற்றுடன் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2009ம் ஆண்டு சாம்பியனான நியூ சவுத்வேல்சையும், மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்தன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஐ.பி.எல். அணிகளான வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பிளிஸ்சார்ட்டும், சருல் கன்வாரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அரைஇறுதியில் அரைசதம் அடித்து கைகொடுத்த பிளிஸ்சார்ட் (3 ரன்), துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கன்வாரும் (13 ரன்) வெளியேறினார். அம்பத்தி ராயுடுவும் (22 ரன்) nullநீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதன் பிறகு ஜேம்ஸ் பிராங்ளினும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். 13.4 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. இவர்கள் களத்தில் நின்ற வரை மும்பை அணி 150 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவும் (24 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பிராங்ளினும் (41 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ரன்அவுட் ஆனது, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இதன் பிறகு அணியின் ரன்வேகம் ஒரேயடியாக குறைந்து போனது. கடைசி கட்டத்தில் மலிங்கா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 2 சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிரடி காட்ட வேண்டிய கடைசி 5 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 140 ரன்கள் இலக்கை நோக்கி கிறிஸ் கெய்லும், தில்ஷனும் பெங்களூர் அணியின் ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் அணியின் ஸ்கோரை தில்ஷன் துவக்கினார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷன் தனது பங்குக்கு 27 ரன்கள் (20 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சக நாட்டவரான மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். ஸ்கோர் குறைவு என்பதாலும், கடினமான ஆடுகளம் என்பதாலும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆட முயற்சித்தார். அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. 5 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதிரடி நாயகர்கள் பெவியன் திரும்பியதும், பெங்களூர் அணி தடுமாறத் தொடங்கியது. அகர்வாலும் (14 ரன், 19 பந்து), விராட் கோலியும் (11 ரன், 19 பந்து) அடுத்தடுத்த ஓவர்களில் பிடிகொடுத்து வெளியேறினர். அணியை தூக்கி நிறுத்த தவறினார்கள். எதிரணியின் முன்னணி வீரர்கள் சீக்கிரம் வெளியேறியதால், மும்பை அணிக்கு உற்சாகம் பிறந்தது. அதன் தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்கு மேலும் சில விக்கெட்டுகள் சரிந்தன. ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால், பெங்களூர் அணி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆட்டமும் மும்பை அணியின் கைக்குள் வந்தது. இலக்கை நெருங்க முடியாமல் தவித்த பெங்களூர் அணி இறுதியில் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்களூரில் நடந்த முந்தைய இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் ரன்களை எளிதாக சேசிங் செய்த பெங்களூர் அணியால் சென்னை மைதானத்தில் 139 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் போனது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பெங்களூர் அணி இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிவரை வந்து தோற்றது. அதற்கு சாம்பியன்ஸ் லீக்கில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பு மறுபடியும் நழுவி போய் விட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ரூ.11.6 கோடியை பரிசுத்தொகையாக தட்டிச்சென்றது. 2வது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோற்ற அணிகள் தலா ரூ.2.3 கோடியை பரிசாக பெற்றன. ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம் வென்றது மும்பை அணிக்கு ஆறுதலாக அமைந்தது. கேப்டன் தெண்டுல்கர், முனாப்பட்டேல், ரோகித் ஷர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் மும்பை அணி சாதித்திருப்பது கவனிக்கத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருதினையும், மலிங்கா தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூ சவுத்வேல்ஸ் வீரர் டேவிட் வார்னருக்கு தங்கபேட் விருது கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.