முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 3 நாட்கள் ஜெயலலிதா பிரச்சாரம்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 12 - அ.தி.மு.க. மேயர் `ேவட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா 3 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.  இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 17.10.2011 அன்று நடைபெற உள்ள சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வருகிற 13-ந் தேதி பிரச்சாரத்தை துவக்கி 15-ந் தேதி சென்னையில் முடிக்கிறார்.  வருகின்ற 13-ந் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய ஊர்களிலும், 14-ந் தேதி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களிலும், 15- ந் தேதி வேலூர் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் செய்கிறார்.  இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்