முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினர் சீண்டினால் சும்மா இருக்கமாட்டேன்- ஈ.வி.கே.எஸ். ஆவேசம்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், அக். - 12 - தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.  விருதுநகர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் கார்த்திகா கரிக்கோல்ராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நகராட்சி முன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது, விருதுநகர் நகராட்சி தலைவராக இருந்த கார்த்திகா கரிக்கோல்ராஜ் இங்குள்ள தி.மு.க. அமைச்சரிடம் சிறைப் பறவையாக இருந்தார். இதையடுத்து நகராட்சி முழுவதிலும் உள்ள நலத் திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும், அவரின் தம்பியும்தான் செய்து வந்தனர். அப்பணிகள் முறையாக செய்யப்படவில்லை. இங்குள்ள முன்னாள் அமைச்சருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இப்போது நான் அமைச்சர் இல்லை என்றாலும் மத்திய அமைச்சர்களிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதன் மூலம் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்