முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவி குழுவினருடன் கலெக்டர் சகாயம் ஆலோசனை

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 12 -   மேலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில்  மகளிர் சுயஉதவிக்குழுவினருடம் தேர்தல் தொடர்பாக கலெக்டர் சகாயம் ஆலோசனை நடத்தினார். மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள்பட்டி, சின்னப்பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் வாக்குகளை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் பதிவு செய்ய வேண்டும். வாக்களிப்பதற்காக பணமோ, அதை தவிர வேற சன்மானங்களோ வழங்கினால் தயக்கமின்றி உடனடியாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளைச்சேரிப்பட்டி, சொக்கம்பட்டி, வஞ்சிநகரம், தும்பைப்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று ஆய்வு செய்து வீடு வீடாக வாக்குச்சீட்டு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். அங்குள்ள சுயஉதவிக்குழு உறுப்பினரிடம் உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையாகவும், நியாயமாகவும், ஜனநாயக முறைப்படி வாக்களிப்பது நம்முடைய கடைமையாகும். அந்தக் கடமையை எந்தவிதத்திலும் விலைக்கு வாங்க நினைப்பவர்களுக்கு இடம் தராமல் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்