தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, அக்.- 13 - குஜராத் கலவர வழக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த கண்காணிப்பை கைவிட வேண்டும் என்ற குஜராத் மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 2002 ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் நேரடியாக கவனித்துவருகிறது. இந்தநிலையில் குஜராத் மாநில அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதிமுறைப்படி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் சுப்ரீம் கோட்டின் கண்காணிப்பு முடிவுக்கு வரவேண்டும். ஆனால் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளை கண்காணித்து வருவது சரியல்ல என்று வாதிட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் மாநில அரசின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைகளை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினர். சமீபத்தில் 2 ஜி. வழக்கின் விசாரணையை கண்காணிப்பதை சுப்ரீம் கோர்ட்டு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு எல்லை மீறக்கூடாது என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதேபாணியில்தான் தற்போது குஜராத் அரசும் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஆனால் குஜராத் அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இது குஜராத் அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. விரதம் எதிரொலி: அத்வானி ரத யாத்திரை பாதையில் மாற்றம்
போபால், அக். - 13 - பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜ் விரதமிருக்க இருப்பதால் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி காலை முதல் நிலவு வரும் வரை விரதம் இருப்பதே கர்வா சவுத் விரதமாகும். ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி நடத்தி வரும் ரத யாத்திரை மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா பகுதிக்கு வரும் 15 ம் தேதி செல்லவிருந்தது. இது சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற தொகுதியாகும். ஆனால் அன்றைய தினம் டெல்லியில் சுஷ்மா சுவராஜ் சவுத விரதம் இருக்கப் போவதாக கூறி விட்டதால் அவர் இல்லாத நிலையில் அவரது தொகுதிக்கு செல்வதை அத்வானி தவிர்த்து விட்டாராம். முன்னதாக நேற்று முன்தினம் அத்வானி ரத யாத்திரை தொடங்கிய பின்னர் சுஷ்மா சுவராஜூக்கு மிகுந்த சோர்வு ஏற்படவே அவர் உடனடியாக பாட்னா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். கடந்த சில நாட்களாக ரத யாத்திரை பணிகளை செய்து வந்த சுஷ்மா மிகுந்த களைப்பு காரணமாக சோர்வடைந்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் உடனடியாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் சுஷ்மா இதை மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று பீகார் தலைநகர் பாட்னா வந்தடைந்த அத்வானி அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊழல் மற்றும் கறுப்பு பண பிரச்சினையை நான் கிளப்பிய போது என்னை இகழ்ந்தார்கள். ஊழல் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதே இந்த கறுப்பு பணம்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும். இந்த ரத யாத்திரையை துவக்கி வைத்த நிதீஷ்குமாருக்கு நான் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யாத்திரையின் முதல் நாளே இவ்வளவு ஆதரவு வேறு எந்த யாத்திரைக்கும் கிடைத்து நான் பார்த்ததில்லை. லோக் அயுக்தா அறிக்கையை வைத்து ஒரு முதல்வர் மீது பா.ஜ.க உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இது கட்சியின் நேர்மையை காட்டுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்திற்கு வரும் உறுதியான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் என்றார். நேற்று பாட்னாவில் இருந்து புறப்பட்டு அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசிக்கு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 5 days 20 min ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 1 day ago |
-
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பேரணி
03 Jul 2022மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
03 Jul 2022தூத்துக்குடி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மி
-
பெய்து வரும் தொடர் கனமழை: சிட்னியில் வெள்ள நீரில் மூழ்கிய குடியிருப்புகள்
03 Jul 2022சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது
-
தென்கொரியா, ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்: வடகொரியா விமர்சனம்
03 Jul 2022சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
-
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை
03 Jul 2022பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
11-ல் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படும் : நத்தம் விஸ்வநாதன் பேட்டி
03 Jul 2022சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க.
-
இன்று சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்வதால் குளிர் உயரும்
03 Jul 2022புதுடெல்லி : சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
-
11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை : வைத்திலிங்கம் திட்டவட்டம்
03 Jul 2022சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை : அலைமோதிய வாடிக்கையாளர்கள்
03 Jul 2022சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
-
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
03 Jul 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க.
-
1974-ல் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்
03 Jul 2022வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
-
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு உயர் அலுவலர்களுடன் ஆய்வு
03 Jul 2022சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு
-
உஸ்பெகிஸ்தானில் ஆக. 2 வரை அவசர நிலை பிறப்பிப்பு : அதிபர் மாளிகை தகவல்
03 Jul 2022தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
-
8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
03 Jul 2022சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.
-
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் : தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
03 Jul 2022சென்னை : சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
03 Jul 2022புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
-
ஹாங்காங் அருகே புயலில் சிக்கி மூழ்கும் கப்பல் : ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை
03 Jul 2022ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
-
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
03 Jul 2022நெல்லை : தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில்.
-
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
03 Jul 2022சென்னை : காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
தொடர் மழையால் சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகளுக்கு தடை
03 Jul 2022கம்பம் : தொடர் மழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
-
ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன் : நாமக்கல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 Jul 2022நாமக்கல் : ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி
03 Jul 2022பாட்னா : பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மி
-
மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணி
03 Jul 2022மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணியினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-07-2022
03 Jul 2022 -
கனமழையால் மீட்புபணி பாதிப்பு: மணிப்பூர் நிலச்சரிவிற்கு பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
03 Jul 2022இம்பால் : மணிப்பூரில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலசரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.