எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக். - 13 - மதுரையில் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாநகராட்சியை அ.தி.மு.கவிடம் மதுரை மக்கள் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். மதுரை அலங்கார் தியேட்டர் அருகில் ஆவின் சந்திரன் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி. வி. ராஜன்செல்லப்பா மற்றும் 72 வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர் பி. குமார் ஆகியோரை ஆதரித்து அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முத்துமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் ரமணி எம்.சி. வக்கீல் ராமசாமி, சுப்புராம், முருகேசன், குஞ்ஜார், ராஜேந்திரன், சேகர், மணிகண்டன், அருண், பூப்பாண்டி, ரமேஷ்பாபு, வெங்கடேஷ், பாண்டியன் சிமிண்ட் கடை சண்முகம், சித்திரை செல்வம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வை வெற்றி பெற செய்த பெருமைக்குரிய மக்கள் நீங்கள். சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அராஜக கூட்டத்திடம் இருந்து மதுரையை மீட்டுத் தருவேன் என்று உறுதியளித்தார். அதன்படி முதல்வர் பொறுப்பேற்றவுடனேயே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியானது. குறிப்பாக, கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பத்தார்களின் பின்னணியில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மக்களை மிரட்டி அபகரித்த சொத்துக்கள், திட்டமிட்டு நிலமோசடிகள் செய்தவர்கள் உள்ளிட்டோரை சட்டப்படி அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் மதுரையில் நடந்த அத்தனை அராஜகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து மதுரை மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்ததோடு மதுரை மாநகராட்சி மக்களின் உயிருக்கும், உடலுக்கும் முழுமையான பாதுகாப்பை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது.
அப்படிப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி காணிக்கையாக மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. வசம் ஒப்படைக்க வாக்காள பெருமக்களாகிய நீங்கள் மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா மற்றும் 72 வது வார்டு கவுன்சிலர் குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 20 கிலோ அரிசி, இலவச கறவை மாடு, ஆடு, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட 7 வகையான நலத்திட்டங்களை அறிவித்து உடனடியாக செயல்படுத்தினார். இந்த நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. வசம் ஒப்படைக்க வாக்காள பெருமக்கள் முன்வர வேண்டும்.
மேலும் சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்க கூடியது அ.தி.மு.க மட்டுமே. முதல் முதலாக மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றிய போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ராதா, அடுத்து வழக்கறிஞர் அமர்நாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் முதலாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கைப்பற்றிய போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனை மதுரை மேயராக அமர வைத்து முதல் மரியாதை செலுத்தி பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் இப்போது 100 மாநகராட்சி கவுன்சிலர்களில் இந்த சமுதாயத்தை சேர்ந்த 9 பேருக்கு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தி.மு.க வினரால் கடந்த 15 ஆண்டு காலமாக சீரழிக்கப்பட்ட மதுரை மாநகராட்சியை சீர்படுத்திடவும், இந்த பகுதி மக்களுக்கு உரிய பட்டாக்கள் கிடைத்திடவும், அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றிடவும், மேயர் வேட்பாளர் வழக்கறிஞர் வி. வி. ராஜன் செல்லப்பா, கவுன்சிலர் வேட்பாளர் குமார் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். சேகர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.