முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு நன்றி காணிக்கையாக மாநகராட்சியை ஒப்படையுங்கள்- முத்துமணி

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக். - 13 - மதுரையில் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாநகராட்சியை அ.தி.மு.கவிடம் மதுரை மக்கள் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.  மதுரை அலங்கார் தியேட்டர் அருகில் ஆவின் சந்திரன் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி. வி. ராஜன்செல்லப்பா மற்றும் 72 வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர் பி. குமார் ஆகியோரை ஆதரித்து அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முத்துமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  இந்த பிரச்சார கூட்டத்தில் ரமணி எம்.சி. வக்கீல் ராமசாமி, சுப்புராம், முருகேசன், குஞ்ஜார், ராஜேந்திரன், சேகர், மணிகண்டன், அருண், பூப்பாண்டி, ரமேஷ்பாபு, வெங்கடேஷ், பாண்டியன் சிமிண்ட் கடை சண்முகம், சித்திரை செல்வம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது,  நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வை வெற்றி பெற செய்த பெருமைக்குரிய மக்கள் நீங்கள். சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அராஜக கூட்டத்திடம் இருந்து மதுரையை மீட்டுத் தருவேன் என்று உறுதியளித்தார். அதன்படி முதல்வர் பொறுப்பேற்றவுடனேயே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியானது. குறிப்பாக, கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பத்தார்களின் பின்னணியில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மக்களை மிரட்டி அபகரித்த சொத்துக்கள், திட்டமிட்டு நிலமோசடிகள் செய்தவர்கள் உள்ளிட்டோரை சட்டப்படி அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் மதுரையில் நடந்த அத்தனை அராஜகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து மதுரை மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்ததோடு மதுரை மாநகராட்சி மக்களின் உயிருக்கும், உடலுக்கும் முழுமையான பாதுகாப்பை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது. 

அப்படிப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி காணிக்கையாக மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. வசம் ஒப்படைக்க வாக்காள பெருமக்களாகிய நீங்கள் மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா மற்றும் 72 வது வார்டு கவுன்சிலர் குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 20 கிலோ அரிசி, இலவச கறவை மாடு, ஆடு, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட 7 வகையான நலத்திட்டங்களை அறிவித்து உடனடியாக செயல்படுத்தினார். இந்த நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. வசம் ஒப்படைக்க வாக்காள பெருமக்கள் முன்வர வேண்டும். 

மேலும் சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்க கூடியது அ.தி.மு.க மட்டுமே. முதல் முதலாக மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றிய போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ராதா, அடுத்து வழக்கறிஞர் அமர்நாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் முதலாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கைப்பற்றிய போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனை மதுரை மேயராக அமர வைத்து முதல் மரியாதை செலுத்தி பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் இப்போது 100 மாநகராட்சி கவுன்சிலர்களில் இந்த சமுதாயத்தை சேர்ந்த 9 பேருக்கு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

தி.மு.க வினரால் கடந்த 15 ஆண்டு காலமாக சீரழிக்கப்பட்ட மதுரை மாநகராட்சியை சீர்படுத்திடவும், இந்த பகுதி மக்களுக்கு உரிய பட்டாக்கள் கிடைத்திடவும், அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றிடவும், மேயர் வேட்பாளர் வழக்கறிஞர் வி. வி. ராஜன் செல்லப்பா, கவுன்சிலர் வேட்பாளர் குமார் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். சேகர் நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago