எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, மார்ச் - 7 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றியைப் பெற்றது. 10 வது உலக கோப்பையின் பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெறாத அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதே மைதானத்தில் கடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து அணி இன்று இந்திய அணியை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டிர்லிங் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை ஒரு ரன். இதையடுத்து ஜோய்ஸ் களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஓபிரைன், கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினார். குறிப்பாக போர்ட்டர்பீல்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 122 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஓபிரைன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஒயிட்டும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது பந்துவீச வந்த யுவராஜ்சிங், 5 ரன்கள் எடுத்திருந்த ஒயிட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். கேட்ச் பிடித்து அவுட்டாக்கியவர் தோனி. அடுத்து கடந்த லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த கெவின் ஓபிரைன் களமிறங்கினார். ஆனால் இவரது விக்கெட்டை யுவராஜ்சிங் தானே பந்துவீசி தானே பிடித்து காலி செய்தார். ஓபிரைன் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. அப்போது அணியின் எண்ணிக்கை 33.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களாக இருந்தது. அடுத்து குசாக், போர்ட்டர்பீல்டுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த போர்ட்டர்பீல்டு 75 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 160. அடுத்து வந்த மூனேயும், யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து குசாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜான்ஸ்டன். ஆனால் குசாக்கும் 24 ரன்களை எடுத்திருந்தபோது யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 184. அடுத்து வந்த டோக்ரெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201. ஜோன்ஸ்டன் 17 ரன்களை எடுத்திருந்தபோது முனாப் பட்டேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்தது. ரான்கின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் அபாரமாக பந்துவீசி 31 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஹீர்கான் 2 விக்கெட்டுகளையும், முனாப்பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லா இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்தது. துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக சேவாக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அணியின் எண்ணிக்கை அப்போது 9. அடுத்து டென்டுல்கருடன், காம்பீர் ஜோடி சேர்ந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 10 ரன்களை எடுத்திருந்தபோது காம்பீர் ஜான்ஸ்டனின் பந்தில் குசாக்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24. அடுத்து இளம் வீரர் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் டென்டுல்கரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 87 க்கு உயர்ந்தபோது டென்டுல்கர் 56 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் டோக்ரெலின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்நிலையில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோக்ளி 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. அணியின் மொத்த ஸ்கோர் 167 ஐ அடைந்தபோது தோனி 34 ரன்களில் டோக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் யூசுப்பதான் களமிறங்கினார். இவரும் யுவராஜ் சிங்கும் வெற்றிக்கு தேவையான ரன்களை கடைசியில் அதிரடியாக சேர்த்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் அரைசதம் கடந்தார். யூசுப்பதான் 24 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அயர்லாந்து தரப்பில் ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், டோக்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததால் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.