முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே ஊனமுற்ற வாலிபர் அடித்துகொலை

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,அக்.14 - மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக உடல் ஊனமுற்ற வாலிபரை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். மேலூர் அருகே உள்ள கீழ பதினெட்டாம் குடியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் சோனைமுத்து (29). இவர் உடல் ஊனமுற்றவர் ஆவார். நில புரோக்கராக தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கேசவன், மலைச்சாமி முருகன் ஆகியோருக்கும் இடையே நில விற்பனை குறித்து முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சோனைமுத்துவை உடல் ஊனமுற்றவர் என்றும் பாராமல் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சோனைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவன், மலைச்சாமி, முருகன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்