முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதுக்கி வைத்திருந்த பித்தளை 34 அண்டாக்கள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,அக்.14 - மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் அருகே அழகு நாச்சியார் புரத்தில்  வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கிவைக்கப்பட்டிருந்த 34 பித்தளை அண்டாக்கள் மற்றும் மதுபாட்டிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராம பகுதிகளில் வாக்காளர்களை கவர அதிகளவில் பணம், பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க கலெக்டர் சகாயம் உத்தரவின்பேரில் 30 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புகார்களை தெரிவிக்க போன் எண்களுடன் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

துணை கலெக்டர் ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் இயங்கும் தனிப்படையினர் புகார்கள் வந்தவுடன் அந்த பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பணம், பாத்திரங்கல் சிக்கியுள்ளன. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் அருகே அழகு நாச்சியார்புரத்தில் வாக்காளர்களுக்கு அண்டாக்கள் வழங்கப்படுவதாக புகார் வந்தது.

தகவலறிந்த வடக்கு தாலுகா தாசில்தார் அலெக்சாண்டர்ராய் தலைமையில் அதிகாரிகள் சோதனையிட்டபோது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 அண்டாக்கள் மற்றும்78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்