முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவையில் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக். 14 - மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முதல் (13-ந் தேதி) முதல் 3 நாட்கள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் தொடங்கியுள்ளார். நேற்று (13-ந் தேதி) தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் அவர் பிரச்சாரம் செய்தார். இன்று(14-ந் தேதி) சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் அ.தி.மு.க. மேயர் மற்றும் மாமன்ற கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்தும், நாளை 15-ந் தேதி வேலூர், சென்னையில் போட்டியிடும் மேயர் மற்றும் மாமன்ற கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்தும் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.   

திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நேற்று(13-ந் தேதி) நடைபெற்றது. அப்போது வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.  இங்கு மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஜெயா மற்றும் மாமன்ற வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 9-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். 7 இடங்களில் மக்கள் மத்தியில் அவர் பேசினார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். மலைக்கோட்டை மாவட்டம் ஜெயலலிதாவின் பக்கம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மக்களின் எழுச்சி அப்போது இருந்தது. 

இதனையடுத்து  மீதியுள்ள 9 மாநகராட்சிகளில் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். 

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று 13-ந் தேதியில் தனது முதல் நாள் பிரச்சாரத்தை துவக்கினார்.  15-ந் தேதி சனிக்கிழமை வரை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

முதல் நாளான நேற்று தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். இன்று  14.10.2011 (வெள்ளிக் கிழமை)- சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் அவர் மின்னல் வேக பிரச்சாரம் செய்கிறார். நாளை 15.10.2011 (சனிக்கிழமை)- வேலூர், சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். 

முன்னதாக, நெல்லை, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று (13-ந் தேதி) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். பிறகு நெல்லையிலும், மதுரையிலும் அவர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள திடலில் ஹெலிகாப்டரில் பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலமாக புதூர் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் மற்றும் வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இன்று ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார். அவரது வருகையை முன்னிட்டு மேற்கண்ட ஊர்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்